நம் வாழ்க்கையில் உள்ள அந்த உறவுகள், அவை நம் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன மற்றும் நம் வாழ்வில் கடவுளின் திட்டங்களையும் நோக்கங்களையும் செயல்படுத்துகின்றன.
இந்த தெய்வீக உறவுகளின் அதிவேக (மிக விரைவாக வளரும்) சக்தியின் காரணமாக நீங்கள் சாதிக்க பல வருடங்களாக எடுத்துக்கொண்ட விஷயங்கள் மிகக் குறைந்த கால கட்டத்தில் நிறைவேறும் – அவற்றை அடையாளம் கண்டு போற்றுங்கள்.
இனிமையான(கிறிஸ்துவில் கிடைக்கும்) நட்புகள் ஆன்மாவைப் புதுப்பித்து நம் இதயங்களை மகிழ்ச்சியுடன் எழுப்புகின்றன, ஏனென்றால் நல்ல நண்பர்கள் கடவுளின் பிரசன்னத்தின் நறுமண தூபத்தை அளிக்கும் அபிஷேக எண்ணெய் போன்றது.
நல்ல நட்பு தங்கத்தை விட மதிப்பு வாய்ந்தது மற்றும் கடினமான சோதனைகளில் நம்பிக்கையுடன் சகித்துக்கொள்ள உதவும்.
இருப்பினும், கடவுளுக்காக விசுவாசத்தில் பிணைக்கப்படாத நட்புகள் நமக்குத் தெரியாமல் நம் இதயங்களை சிதைக்கலாம்.
நட்புகள் நம் வாழ்வில் எவ்வளவு நன்மை பயக்குமோ, அவை நம் நற்பண்புகளுக்கு அழிவுகரமானதாகவும் இருக்கும்.
எனவே நாம் யாருடன் நண்பர்களாக இருக்கிறோம் மற்றும் மற்றவர்களுடன் செலவழித்த நேரம் குறித்து நாம் பகுத்தறிந்து மற்றும் நேர்மையுடன் வாழ வேண்டும்.
நாம் கடவுளாலும் அவருடைய புனித வார்த்தையாலும் அழைக்கப்படுகிறோம், ஒருவர் மற்றவரிடம் அன்பாக இருக்க வேண்டும், மற்றவர்களை தயவுடனும் மனத்தாழ்மையுடனும் நடத்த வேண்டும் .. ஆனால் இது நம்மீது ஊழல் செய்யும் செல்வாக்கோடு இருப்பவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை.
நம்மைப் போலவே அவர்களை நேசிக்கும்போது அவர்களின் செயல்களை நாம் கண்டிப்பதில் நேர்மையாக இருக்க முடியும்.
“எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்கள் இதயத்தை மகிழ்விக்கின்றன, மேலும் ஒரு நண்பரின் இனிமை அவருடைய தீவிர ஆலோசனையிலிருந்து வருகிறது.” … (நீதிமொழிகள் 27: 9)
February 23
And let us consider how we may spur one another on toward love and good deeds. Let us not give up meeting together, as some are in the habit of